Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 17, Verse 8

ஆயு:ஸத்1த்1வப3லாரோக்3யஸுக2ப்1ரீதி1விவர்த4னா: |

ரஸயா: ஸ்நிக்தா4: ஸ்தி2ரா ஹ்ருத்3யா ஆஹாரா: ஸாத்1த்1விக1ப்1ரியா: ||8||

ஆயுஹு ஸத்வ----நீண்ட ஆயுளை ஊக்குவிக்கும்; பல----வலிமை; ஆரோக்ய----ஆரோக்கியம்; ஸுக----மகிழ்ச்சி; ப்ரீதி-----திருப்தி; விவர்தனாஹா----மேம்படுத்தும்; ரஸ்யாஹா--—சாறு நிறைந்ததாக; ஸ்நிக்தாஹா--—சதைப்பற்றுள்ளதாக; ஸ்திராஹா---ஊட்டமளிப்பதாக; ஹ்ருதியாஹா—--இதயத்திற்கு மகிழ்ச்சியளிக்கும்; ஆஹாராஹா--—உணவு; ஸாத்த்விகப்ரியாஹா—--நன்மையின் முறையில் உள்ளவர்களுக்குப் பிரியமானது

Translation

BG 17.8: நல்வழியில் இருப்பவர்கள் ஆயுட்காலம் , நல்லொழுக்கம், வலிமை, ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் திருப்தி ஆகியவற்றை மேம்படுத்தும் உணவுகளை விரும்புகிறார்கள். இத்தகைய உணவுகள் சாறு நிறைந்ததாகவும், சதைப்பற்றுள்ளதாகவும், ஊட்டமளிப்பதாகவும், இயற்கையாகவே சுவையாகவும் இருக்கும்.

Commentary

அத்தியாயம் 14, வசனம் 6 இல், ஸ்ரீ கிருஷ்ணர் நன்மையின் முறை தூய்மையான, பிரகாசமான மற்றும் அமைதியானது, மேலும் மகிழ்ச்சி மற்றும் திருப்தியின் உணர்வை உருவாக்குகிறது என்று விளக்கினார். நன்மையின் முறையிலான உணவுகள் அதே விளைவைக் கொண்டுள்ளன. மேலே உள்ள வசனத்தில், இந்த உணவுகள் 'நீண்ட ஆயுளை ஊக்குவிக்கும்' -- ஆயுஹு ஸத்1வா என்ற வார்த்தைகளுடன் விவரிக்கப்பட்டுள்ளன. அவை நல்ல ஆரோக்கியம், நல்லொழுக்கம், மகிழ்ச்சி மற்றும் திருப்தி ஆகியவற்றை வழங்குகின்றன. இத்தகைய உணவுகள் சாறு நிறைந்ததாகவும், இயற்கையாகவே சுவையாகவும், மென்மையானதாகவும், நன்மை பயக்கும்தாகவும் இருக்கிறது. தானியங்கள், பருப்பு வகைகள், அவரை, மொச்சை, பழங்கள், காய்கறிகள், பால் மற்றும் பிற சைவ உணவுகள் இதில் அடங்கும்.

எனவே, ஆன்மிக வாழ்க்கைக்கு உகந்த நற்குணத்தின் குணங்களை வளர்ப்பதற்கு சைவ உணவு நன்மை பயக்கும். எண்ணற்ற நன்மையின் முறையால் ஈர்க்கப்பட்ட சிந்தனையாளர்கள் மற்றும் தத்துவவாதிகள் வரலாற்றில் இந்த உணர்வை எதிரொலித்துள்ளனர்:

மனிதன் மாமிசம் உண்ணும் விலங்கு என்பது கண்டிக்கப்பட வேண்டியது அல்லவா? உண்மை, அவர் மற்ற விலங்குகளை வேட்டையாடுவதன் மூலம் சிறந்த அளவில் வாழ முடியும் என்பது உண்மை; ஆனால் இது ஒரு பரிதாபகரமான வழி ... காட்டுமிராண்டித்தனமான பழங்குடியினர் தங்களை விட அதிக நாகரிகத்துடன் இருப்பவர்களுடன் தொடர்பு கொண்டபோது ஒருவரையொருவர் சாப்பிடுவதை விட்டதைப் போலவே மனித இனத்தின் படிப்படியான முன்னேற்றத்தில் விலங்குகளை உண்ணுவதில் இருந்து விட்டு விலகுவது விதியின் ஒரு பகுதி ஆகும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

வால்டனில் ஹென்றி டேவிட் தோரோ

நான் மாமிசம் சாப்பிட மறுப்பது ஒரு சிரமத்தை ஏற்படுத்தியது, மேலும் எனது தனித்தன்மைக்காக நான் கண்டனம் செய்யப்பட்டேன், ஆனால், ஆனால் மறுபரிசீலனை மூலம் மனத் தெளிவு பெற்று விரைவாக புரிந்து கொண்டு அதிக முன்னேற்றம் அடைந்தேன். மாமிசம் உண்பது தூண்டப்படாத கொலை

-பெஞ்சமின் பிராங்க்ளின்

சைவம் நம் மனதை பலவீனப்படுத்துவதாகவும், சுறுசுறுப்பு இல்லாததாகவும், செயலற்றதாகவும் , நம்மை இயக்க ஆற்றல் இல்லாதவர்களாகவும் செய்து விட்டது என்ற தவறான கருத்தை திருத்துவது அவசியம். மாமிச உணவை எந்த நிலையிலும் அவசியமானதாக நான் கருதுவதில்லை.

-மகாத்மா காந்தி

என் சக மனிதர்களே, உங்கள் உடல்களை பாவமான உணவுகளால் அசுத்தப்படுத்தாதீர்கள். நம்மிடம் சோளம் உள்ளது தங்கள் கிளைகளை அவைகளின் எடையுடன் கீழே வளைக்கும் ஆப்பிள் பழங்கள் உள்ளன. நெருப்பில் சமைத்து மென்மையாக்கக்கூடிய காய்கறிகள் உள்ளன. பூமியானது செல்வத்தின் ஆடம்பரமான விருந்துகளை வழங்குகிறது; மிருகங்கள் மட்டுமே தங்கள் பசியை மாமிசத்தால் தீர்த்துக் கொள்கின்றன; இருந்தும் எல்லா மிருகங்களும் மாமிசத்தை உண்ணுவது இல்லை. ஏனென்றால் குதிரைகள், கால்நடைகள் மற்றும் செம்மறி ஆடுகள் புல்வெளிகள் மீது வாழ்கின்றன.

-பிதாகோரஸ்.

என் வயிற்றை இறந்த விலங்குகளின் கல்லறையாக மாற்ற நான் விரும்பவில்லை.

ஜார்ஜ் பெர்னார்ட்ஷா -

விலங்குகளுக்கு எதிரான வன்முறைகளில் கூட, பசுவைக் கொல்வது மிகவும் கொடூரமானது. மாடு மனிதர்களுக்குத் தேவையான பாலை வழங்குகிறது, எனவே அது மனிதர்களுக்கு தாய் போன்றது. தாய் பசு பால் கொடுக்க முடியாத நிலையில் அதைக் கொல்வது உணர்ச்சியற்ற, கலாச்சாரமற்ற, நன்றிகெட்ட செயலாகும்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
17. ஶ்ரத்தா த்ரய விபாக யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!